சட்டம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.....
குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனைக்காக சிறைக்கு அனுப்பப்படும் முன்னர், தீர்ப்பு அளிக்கப்பட உடனே, அந்த தீர்ப்பின் நகலை எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்பட வேண்டும் என்று கு.வி.மு.வி. (Cr.P.C.) 1973, பிரிவு 363 (1) கூறுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் மனு செய்து வேண்டுவதன் அடிப்படையில், அவருடைய மொழியில் சான்றிடப்பட்ட
தீர்ப்பின் நகல் எவ்வித தாமதமுமின்றி வழ்ங்கப்பட வேண்டும் என்று கு.வி.மு.வி. (Cr.P.C.) 1973, பிரிவு 363 (2) கூறுகிறது.
உயர்நீதிமன்றத்தில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நேர்வில் தண்டனை பெற்றவர் மனு செய்தாலும், செய்யாவிட்டாலும் அவருக்கு எவ்வித தாமதமுமின்றி சான்றிடப்பட்ட தீர்ப்பின் நகல் வழங்கப்பட வேண்டும்.