Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

General Clauses Act | பொதுக் கூறுகள் சட்டம்

பொதுக் கூறுகள் சட்டம் (General Clauses Act) பிரிவு 3(42) ல் நபர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது வங்கிகளுக்கும் பொருந்தும். அந்த பொதுக் கூறுகள் சட்டத்தில் "நபர்" என்று குறிப்பிட்டுள்ளதும், வங்கி வரைமுறைச் சட்டத்தில் பிரிவு 45ZA(1) ல் "நபர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளதும் ஒரே பொருளைத் தான் தருகிறது.


ஒரு வாடிக்கையாளர் காலமானதற்கு பின்னர் அவரால் செய்யப்பட்டுள்ள நியமனத்தை செல்லாது என்று கூற வங்கிகளுக்கு உரிமை இல்லை. இது குறித்து ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் " சந்திரம்மா Vs ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் (AIR-1988-AP-289)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் உச்சநீதிமன்றமும் " பனாராசிதாஸ் Vs வெல்த் டேக்ஸ் ஆபிசர் மீரட் (AIR-1965-SC-1387)" என்ற வழக்கிலும் தீர்ப்பு கூறியுள்ளது.

ஒரு வங்கியின் வாடிக்கையாளர் ஒரு தொகையை வைப்பீடு செய்யும் போது Form DA-I இல் ரீன் காலமானதற்கு பின்னர், அவரால் வைப்பீடு செய்யப்பட்ட தொகையை வங்கி யாருக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நபரின் பெயரை குறிப்பிட வேண்டும். வங்கி வரைமுறைச் சட்டம் பிரிவு 45ZA(I) ல் குறிப்பிடப்பட்டுள்ள "நபர்" என்ற விளக்கத்திற்குள், அந்த வாடிக்கையாளர் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள Nominated Person ம் வருவார்.

ஆனால் வங்கி நிறுவன விதிகளில், விதி 2 மற்றும், இந்திய ரிசர்வ் வங்கியால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஆகியவற்றில் நபர் என்றால் தனிப்பட்ட ஒரு நபர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி நிறுவன விதிகளின், விதி 2(I) ல் கூறப்பட்டுள்ள தனிப்பட்ட நபர் என்பதற்கு பொதுக் கூறுகள் சட்டம் பிரிவு 3(42) ல் நபர் என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளவை பொருந்தும்.

ஒரு வாடிக்கையாளர் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை அல்லது அவருடைய வங்கி கணக்கிலுள்ள தொகையை அவர் காலமானதற்கு பின்னர், யாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்று படிவத்தில் குறிப்பிட்டுள்ளாரோ அது அவருடைய விருப்பம் என்கிற காரணத்தினால், அந்த தொகையை வாரிசுரிமை சட்டப்படி அந்த நபரிடம் வங்கி அளிக்க வேண்டும்.

அந்த வாடிக்கையாளர் அந்த தொகையை பெறுவதற்கு ஒருவரை எந்த வற்புறுத்தலோ, தூண்டுதலோ, பொய் வாக்குறுதிகளோ இல்லாமல் குறிப்பிட்டிருந்து அதனை வங்கியும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் மற்ற காரணங்களினால் அந்தத் தொகையை நியமிக்கப்பட்டவருக்கு அளிக்க மறுக்காமல் வாடிக்கையாளரின் விருப்பத்தை வங்கிகள் நிறைவேற்ற வேண்டும்.

ஒரு வாடிக்கையாளர், ஒருவரை நியமனம் செய்ததற்கு பின்னர், ஏதேனும் நடைமுறை மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், அதுகுறித்து வங்கி நிர்வாகம் அந்த வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவித்து, அந்த படிவத்தில் தேவைப்படும் மாறுதல்களை செய்யுமாறு வங்கி நிர்வாகம் அந்த வாடிக்கையாளரிடம் கோர வேண்டும். அந்த வாடிக்கையாளர் உயிரோடு இருந்தால் இதனை வங்கி நிர்வாகம் நிறைவேற்றிக் கொள்ளலாம். வாடிக்கையாளர் உயிரோடு இல்லை என்றால் வங்கி நிர்வாகத்திற்கு வாடிக்கையாளரின் விருப்பத்தை நிறைவேற்றுவதை தவிர வேறு வழியில்லை. Nominated Person டம் பணத்தை கொடுத்தே ஆக வேண்டும்.