THE PREVENTION OF INSULTS TO NATIONAL HONOUR ACT, 1971
தேசிய கொடி மற்றும் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை அவமதிப்பு செய்வதை இந்த சட்டம் தடை செய்கிறது.
பொது இடங்களில் தேசியக்கொடியையோ இந்திய அரசியலமைப்பு சட்டத்தையோ வார்த்தையாலோ எழுத்தாலோ செயலாலோ அவமதிப்பு செய்வது கிழிப்பது சேதப்படுத்தும் போன்ற எந்த செயலை செய்தாலும் மூன்று ஆண்டுகள் வரை தண்டிக்கதக்க குற்றமாகும் என்று இந்த சட்டத்தின் பிரிவு 2 சொல்கிறது.
தேசிய கொடியை வேறு மாதிரி மாற்றியமைத்தால் நன்றாக இருக்கும் என்று நல்லென்னத்தில் பேசுவதோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டு வரவேணாடும் என பேசுவதோ குற்றமாகாது.
தேசிய கீதத்தை பாடுவதை தடுப்பதோடு பாடும் பொழுது அதற்க்கு தடையாக தொந்தரவு செய்வது குற்றமாக கருதப்படுகிறது அதற்க்கு மூன்றாண்டு தண்டனை என பிரிவு 3 சொல்கிறது.
அரசு அறிவிப்பு எதேனும் இருந்தால் தவிர தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடக்கூடாது .
தேசிய கீதம்(official version) 52 நிமிடங்களில் பாடவேண்டும் ஆனால் புதிய இசையமைப்பாளர்கள் தங்களுடைய விருப்பத்திற்க்கு ஏற்ப 52 நிமிடங்களுக்கு மேலாக பாடலை பாடுவது போல் இசையமைத்திருப்பது குற்றமாக கருதவிட்டாலும் தவறாக கருதப்படுகிறது இந்தியா முழுவதும் ஒரே முறையில் தேசிய கீதம் பாடினால் அதன் தன்மை மாறாமல் இருக்கும்.
உச்சநீதிமன்றம் திரையரங்கங்களில் தேசியகீதம் கட்டாயம் ஒவ்வொரு காட்சிக்கும் பாடப்படவேண்டும் என்றும் பாடல் ஒலிக்கும் போது திரையில் கொடி காண்பிக்கப்படவேண்டும் அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.