மூவாயிரம் ஆண்டுக்கு முந்தைய தமிழகத்தில் திருமணவிருந்தில் எவ்வகை உணவு பரிமாறப்பட்டது.?மூவாயிரம் ஆண்டு முந்தைய தமிழகத்தில் உளுந்தங்களியே விருந்தில் பறபரிமாறப்பட்டது. அகநாற்றிலும் நற்றிணையிலும் சான்றுகள் உள்ளன.! காலை சூரியோதத்தில் மணல் பரப்பியதிருமணபந்தலில் திருமணம் நடைபெற்றது. மங்கலபெண்டிர் மணமக்களூக்கு நீரும் நெல்லும் தூவப்பட்டபிறகு மணநாள் சடங்கு நிறைவுபெற்றதாக அகநானூறு என்ற சங்கஇலக்கியம்கூறுகிறது. அதன் பின் உற்றார் உறவினர்களுக்கு உளுந்தங்களி அளித்தாக அந்த இலக்கியம் கூறுகிறது. அந்தகால தமிழர்கள் உணவில் மிகுதியாக உளுந்தை பயன் படுத்தினர் என்பது புலனாகிறது. இன்றும் கிராமங்களில் உளுந்துகளி பறிமாறுவதுண்டு. வீடுகளில் உளுத்தங்கஞ்சி காய்ச்சுவார்கள். உளுந்து .! 100கிராம் உளுத்தில்25கிராம்புரமுண்டு. கால்சியம் பொட்டாசியம் மக்னீசயம் இரும்புசத்து இன்ன பிற சத்துக்களும் உண்டூ. எலும்பு வளர்ச்சி உற்றதுணைவன். எலும்பு உடைந்தவர்களுக்கு உளுந்து வரப்பிரசாதம். உளுந்தில் உள்ளநார்சத்து சர்க்கரை நோய்க்கு நல்லது கொழுப்பு1.7 அளவே உள்ளது. இது மிக குறைவான அளவாகும். பூப்படைந்த மகளிருக்கும் உளுந்து பொருள் பலகாரத்தை அதிகம் தரவேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட உளுந்து பலகாரத்தை விட பச்சை உளுந்தமாவு சிறந்தது. வெல்லத்திற்கு பதில் பனைவெல்லத்தை பயன் படுத்துவது இன்னும் சிறப்பு. இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் உளுந்து விளைவிக்கப்பபடுகிறது.
http:www.legalfirm.in