ஊழலை ஒழிக்க சகாயம் அரசியலுக்கு வர வேண்டும்: ஒரே போடாக போட்ட பழ.கருப்பையா சென்னை: நேர்மையான அதிகாரி சகாயம் போன்றோர் அரசியலில் ஈடுபட்டு ஊழலை ஒழிக்க வேண்டும் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பழ.கருப்பையா வேண்டுகோள் விடுத்தார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அக்கட்சி எம்.எல்.ஏ பழ.கருப்பையா நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நேற்று இரவு அறிவித்தார். இதனிடையே இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா தனது துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அதிகாரிகள் ஒத்துழைக்காவிட்டால் அரசியல்வாதிகள் ஒரு பைசா கூட ஊழல் பண்ண முடியாது, முதலில் அதிகாரிகளுக்கு லஞ்சம் தருவதை நாம் தவிர்க்க வேண்டும், நம்மிடம் இருந்து தான் ஊழலும் லஞ்சமும் ஆரம்பிக்கிறது...